
உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் அதிக செல்வாக்கும் அறிவியல் புரட்சியும்
செய்த முக்கிய நபர்களில் இவரும் ஒருவர் ஆவார். பெரும்பாலும் நிறைய
அறிவுடையவர்கள் சிற்சில விஷயங்களில் முட்டாள்தனமாகவும்,
சிறுப்பிள்ளைதனமாகவும் செயல்படுவர் என நாம் வரலாற்றில் பல முறைக்
கண்டுள்ளோம்.
வலுவின்றி பிறந்தாராம்
சார் ஐசாக் நியூட்டன் பிறக்கும் போது மிகவும் வலுவின்றி பிறந்தாராம்.
இதன் காரணமாக இக்குழந்தை விரைவில் இறந்துவிடும் என்று இவரது தாய் உட்பட
அனைவரும் எண்ணினர். தண்ணீர் ஊற்ற பயன்படும் ஜாடியுனுள் அகப்படும் அளவு தான்
இருந்தாராம் பிறந்த குழந்தையாக இருந்த நியூட்டன்.
விவசாயக் குடும்பம்
நியூட்டன் பிறக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னரே அவரது தந்தை
இறந்துவிட்டார். இவரது குடும்பம் ஓர் விவசாயக் குடும்பம். இவர் பதினேழு
வயது வரை பள்ளிக்கு சென்று வீடு திரும்பியதும் விவாசாயம் செய்வதை
வாடிக்கையாக வைத்திருந்தார் அம்மாவின் கட்டாயத்தின் பேரில். அப்போது
கிட்டத்தட்ட முற்றிலும் ஓர் முழு விவசாயியாக மாற்றும் தருணத்தில் அவர்
இருந்த போது தான், அவரது மாமா நியூட்டனை கேம்பிரிட்ஜ், டிரினிடி
கல்லூரியில் சேர்த்துவிட்டார்.
ஆப்பிள்
உலகின் சிறந்த மற்றும் புகழ்பெற்ற கதைகளில் ஒன்று நியூட்டனின் ஆப்பிள்
விழுந்து புவி ஈர்ப்பை கண்டறிந்த கதை. ஆனால், சிலர் இதை கட்டுக்கதை
என்றும் கூறுகிறார்கள். உண்மையில், நியூட்டனே, ஒருமுறை நண்பரிடம், ஜன்னல்
வழியாக மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவதை முறைத்து, உன்னித்து கவனித்துக்
கொண்டிருந்தார் என்றும், அது தான் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க
அடிப்படையாய் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
ஆப்பிள் மரம்
நியூட்டன் படித்த பள்ளியை சேர்ந்தவர்கள், புவி ஈர்ப்பு விசையை
நியூட்டன் கண்டுபிடிக்க காரணமாக இருந்த அந்த ஆப்பிள் மரத்தை வாங்கி
அவர்களது பள்ளி தோட்டத்திற்கு இடம் மாற்றி கொண்டு சென்றுவிட்டார்களாம்
இரகசியம்
நியூட்டன் கண்டுபிடித்த பெரும்பாலானவை அவரது 21 - 27 வயதிற்கு
இடைப்பட்டு அவரால் கண்டறியப்பட்டது. ஆனால், அவற்றை அவர் அப்போதே
வெளியிடாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தார். முக்கியமாக அலைக்கற்றை
நிறங்கள் (spectrum of colors) பற்றி அவர் கண்டறிந்ததை கூட சில ஆண்டுகள்
கழித்து தான் உலகிற்கு கூறினார்.
ஊசியால் கண்ணை குத்திக் கொண்டார்
ஒரு முறை தனது கண் குழியை தானே ஊசியை வைத்துக் குத்திக் கொண்டார்
நியூட்டன். இவ்வாறு செய்வதால் கண்ணின் நிறம் பார்க்கும் திறனில் ஏதேனும்
மாற்றம் ஏற்படுகிறதா என உணர செய்தாராம் நியூட்டன்.
ரசவாதம் மற்றும் இறையியல்
புவி ஈர்ப்பு விசை மற்றும் ஒளி சார்ந்து செய்த ஆராய்ச்சியை விட தனது
ரசவாதம் மற்றும் இறையியல் (alchemy and theology) ஆராய்ச்சிக்கு தான் நிறைய
நேரம் செலவழித்தார் நியூட்டன்.
தந்தை மகன் ஒரே பெயர்
சார் ஐசாக் நியூட்டனின் தந்தை பெயரும் ஐசாக் நியூட்டன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர்
1703 - 1727 ஆகிய இடைப்பட்ட காலங்களில் ராயல் சோசைட்டி (Royal Society)
என்ற இயற்கை அறிவியல் என்ற அமைப்பிற்கு இவர் தலைவராக இருந்தார்.
ஆராய்ச்சிக் கூடத்தை தீக்கிரையாக்கிய நாய்
நியூட்டனின் நாய் ஒன்று, அவர் இருபது வருடங்களாக ஆராய்ச்சி செய்துவந்த
ஆராய்ச்சிக் கூடத்தைத் தீக்கிரையாக்கியது. இதில், அவரது பல்வேறு ஆராய்சிகள்
அழிந்து போயின என்று கூறப்படுகிறது
தனிமையில் இருந்த நியூட்டன்
1678ஆம் ஆண்டு அவரது தாய் இறந்த பிறகு ஏறத்தாழ ஆறு வருடங்கள் தனிமையில்
இருந்தார் நியூட்டன். இந்த ஆறு ஆண்டு காலத்தில் தான் நிறைய அறிவியல்
சார்ந்தவற்றை நியூட்டன் எழுதியதாக கூறப்படுகிறது.
நரம்பு தளர்ச்சி
1678 ஆம் ஆண்டு நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டார் நியூட்டன்.
ரசவாதம் (alchemy) குறித்த ஆராய்ச்சியில் இவர் ஈடுபட்டதன் விளைவாகவே
இவ்வாறு ஆனதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment