Pages

Thursday, 9 July 2015

கோவை நகரின் அரிய புகைப்படங்கள்


பேரூர் பட்டீஸ்வரர் கோயில் : 
கோயம்பத்தூரில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் பழமையான சைவ திருத்தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் பழைய புகைப்படம். 







Friday, 26 June 2015

துணியில் படிந்திருக்கும் கறைகளை எளிதாக போக்குவதற்கான டிப்ஸ்!!!

நீங்கள் எங்காவது விருந்திற்கு சென்ற இடத்தில் ரெட் ஒயின் அல்லது தக்காளி சாஸ் கொட்டி துணியில் கறைப்படிந்துவிட்டால் பயப்படவே வேண்டாம். வீட்டிற்கு சென்றதும், துணியை கொஞ்சம் ஈரம் செய்து, அந்த கறையின் மீது கிளப் சோடாவை சேர்த்து துவைத்தால் அந்த கறை மிக எளிதில் போய்விடுமாம். வாஷிங் மெஷினில் துவைத்தால் இன்னும் நல்லது.

Monday, 22 June 2015

வாடகை ஒப்பந்த பத்திரம் - மாதிரி

வாடகை ஒப்பந்த பத்திரம்

--------- ம் வருடம் ---------------- மாதம் ---- ஆம் தேதி 23, சேதுபதி நகர், chennai திரு Raja அவர்கள்
1வது பார்ட்டியாகவும்(வீட்டின் உரிமையாளர்)

சொந்த ஊரான் -----------------மாவட்டம், --------------- வட்டம்,-----------------தெரு, கதவு எண்---------- ல் வசித்து வரும் திரு/திருமதி ------------------------
அவர்கள் 2வது பார்ட்டியாகவும் (வாடகைதாரர்)


சார் ஐசாக் நியூட்டன் பற்றிய விந்தையான தகவல்கள்!!!

http://images3.wikia.nocookie.net/__cb20120418131717/masseffect/de/images/4/45/IsaacNewton.jpgஉலகின் அடிப்படையான புவி ஈர்ப்பு சக்தியைக் கண்டறிந்து பெரும்பாலான அறிவியல் ஆராய்சிகளுக்கு வித்திட்டவர் சார் ஐசாக் நியூட்டன். இவர் வெறும் ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல, கணிதவியலாளர் மற்றும் தத்துவஞானியும் கூட. அறிவியல், கணிதம், இயந்திரவியல் ஈர்ப்பு விசை என நிறைய துறைகளில் பெரும் ஆராய்சிகளை செய்தவர். 
 உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் அதிக செல்வாக்கும் அறிவியல் புரட்சியும் செய்த முக்கிய நபர்களில் இவரும் ஒருவர் ஆவார். பெரும்பாலும் நிறைய அறிவுடையவர்கள் சிற்சில விஷயங்களில் முட்டாள்தனமாகவும், சிறுப்பிள்ளைதனமாகவும் செயல்படுவர் என நாம் வரலாற்றில் பல முறைக் கண்டுள்ளோம்.
அந்த வகையில், உலகம் போற்றும் அறிவியல் ஞானியான சார் ஐசாக் நியூட்டன் பற்றிய சில விந்தையான தகவல்களைக் குறித்து இனிக் காணலாம்....

Tuesday, 17 December 2013

அர்த்த உட்கடாசனம்

அர்த்த உட்கடாசனம்
செய்முறை : 

இரு கால்களையும் ஒன்றாக வைத்து நிற்கவும். கண்கள் திறந்தபடி, கைகள் உடலை ஒட்டிய நிலையில் இயல்பாக இருக்கட்டும். இந்த நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் முன்புறமாக மேலே கொண்டு செல்லவும். 

தலைக்கு மேல் கைகள் நேராக இருக்க வேண்டும். ஓரிரு விநாடிகளுக்குப் பின், மூச்சை வெளியே விட்டபடி, கால் முட்டியை மடித்து, மேல் உடலை முன்புறமாகக் கொண்டுசெல்லவும். 

ஓரிரு விநாடிகளுக்குப் பின், மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் மேல்புறமாக நகர்த்தி முதுகெலும்பை, பின்னால் நன்றாக வளைக்க வேண்டும். இந்த நிலையில் தொடைகள் தரைக்குச் சமமாக இருக்கும். பார்வை நேராக இருக்கும். 

பலன்கள் : 

கணுக்கால்கள், முட்டிகள், தொடைப் பகுதிகள் வலுவாகும். கீழ் முதுகு நன்கு பலம்பெறும். தோள்பட்டைத் தசைகள் நன்கு விரிவடையும்.